Monday, September 14, 2009

நாளைய தமிழினம்

நாளைய தமிழினம்

வணக்கம் தோழர்களே,
எவ்வாறெல்லாம் இருக்கவேண்டும் என நினைத்து வாழ்ந்திருந்தோம் அன்று.
அவையெல்லாம் ஒரு நொடியில் தகர்த்தெறியப்பட்டதே இன்று.
உங்கள் எல்லோருக்கும் நேற்று நடந்ததும் இன்று நடந்துகொண்டிருப்பதும் நன்கு அறிவீர்கள். சிறைக்கூண்டுகளில் இன்று அடைபட்டும், சித்திரவதைகளிற்கு உள்ளாகியும் சொல்லொணாத்துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள்,

· பல இளைஞர்கள் மர்மமான் முறையில் காணாமல் போகின்றார்கள்.
· விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்பவர்களில் பலர் இருப்பிடம் திரும்புவதில்லை.
· யுவதிகள் மட்டும் விதிவிலக்கல்ல. பாலியல் வன்முறைகளிற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
· மற்றும் சிறுவர்களும் கூட பாலியல் தொழில்களிற்காகவும், கூலித்தொழில்களிற்கும் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளிற்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்.
· போராளிகள் என்ற பெயரிலும் அழைத்துச்செல்லப்பட்டவர்கள் சித்திரவதைகளிற்கு உள்ளாக்கப்பட்டு ஏற்படும் காயங்களாலும் தகுந்த மருத்துவவசதிகளுமின்றி இறக்கின்றனர்.
· 300,000 மக்கள் வதைமுகாம்களில் இருப்பதாக யுத்தம் முடிந்தபின் கிடைத்த தரவு.
· இவ்வெண்ணிக்கை சற்று மெதுவாகக்குறைந்து இன்று வரை 280,000 எண்ணிக்கை வெளியிடப்படுகின்றது.
· அதுமட்டும் அல்லாமல் வயோதிபர்கள், ஆதரவு அல்லாதோர் மருத்துவ வசதிகளின்றி உயிரிழக்கின்றனர்.
· இறுதிப்போரின் போது காயமடைந்தவர்கள் இன்றும் தகுந்த மருந்து வசதிகளின்றி அவயங்களை இழக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்கள்.



இவ்வாறு ஈழத்தமிழர் படும் அவலங்கள் ஒன்றா, இரண்டா..... ஏன் நாங்கள் என்ன பாவம் செய்தவர்கள் இறைவா? என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?
என்று ஈழத்தமிழர்கள் தத்தம் இடங்களிற்கு செல்வார்கள்? எவ்வாறு எமது உரிமையை பெற்றுக்கொள்ளப்போகின்றோம்? நாங்கள் எப்போது எமக்குரிய நீதியை பெறுவோம்?

என்றெல்லாம் ஈழத்தமிழனுக்கு பல கேள்விகள் எழும் என நினைக்கின்றேன்.
இவற்றை எப்போது பெறுவோம் என்று இன்று கனவு காண்பதை விட இன்று நம் கண் முன்னால் எவ்வாறான பணிகள் விரிந்து கிடக்கின்றன என்பதை பல எழுத்தாளர்கள சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

அவற்றை சோ்த்துச்சொல்வதாயின் இன்றைய போராட்டம் புலம் பெயர்தமிழர்களின் கைகளில் தாரைவார்க்கப்பட்டது. முக்கியமாக பணியாற்ற வேண்டியவர்கள் இளையவர்களே. அப்படியானால் வயது முதிந்தவர்கள் எவ்வாறு பங்களிப்புச்செய்ய முடியும்? அவர்கள் இளையோருக்கான தகவல்களை வழங்கல், களங்களை அமைத்துக்கொடுத்தல், வரலாறுகளை கற்பித்தல், கடந்த காலங்களில் எமது முன்னோர் இழைத்த தவறுகள், ஆயுத்ப்போராட்டம் எவ்வாறு ஈழத்தமிழரிடத்தில் கையளிக்கப்பட்டது போன்ற விடயங்களை இளையோரிற்கு பின் புலத்தில் நின்று உதவிகளைச்செய்யமுடியும்.

மற்றும் இன்றைய தேவையின் பொருட்டு புலம் பெயர் நாடுகளில் அரசியல் பரப்புரை போராட்டங்கள் நடைபெறுகின்றன, ஆனாலும் அவை எல்லா தரப்பினராலும் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று உற்று நோக்கின் இல்லை என்பதே விடையாகும்.

அதற்கு நாம் அவர்களை குறை கூறமுடியாது. அவர்களில் பலபேர்கள் கணனி பற்றிய அறிவு சற்றுக்குறைந்தவர்கள், கடின உழைப்பாளிகள்......
ஆகவே அவர்களிற்குரிய களங்களை பரப்புரைக்குழுவில் உள்ளவர்கள் அமைத்து கொடுக்கவேண்டும். இதே நேரம் பல தமிழ் உறவுகள் பல போராட்டங்களி கலந்து கொண்டும் எதுவித பலனும் ஏற்படவில்லையே என்ற தயக்கத்தில் இருக்கின்றார்கள் என்று அறியமுடிகின்றது.

அன்றைய காலத்தில் விடுதலைப்புலிகளுடன் சண்டை நடைபெற்றபோது நாங்கள் வீதியில் இறங்கிப்போராடினோம்.

Sri Lanka stop killing tamils
Sri Lanka stop the genocide of tamils
What we want? tamil eelam when we want? now
Tamil tigers freedom fighters
Our leader Prabhakaran
We want tamil eelam


போன்ற வாசகங்களை பறைசாற்றிய வண்ணம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்தோம். ஆனாலும் இன்று விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையிலே மக்களைக்காப்பாற்றுமாறு கோரி ஏன் அன்று செய்த போராட்டங்களை போல் செய்யவில்லை என்ற கேள்விக்கான விடையை உங்களிடமே விட்டுவிடுகின்றேன்.

அதாவது இன்றைய போராட்டம் இளையோரின் கைகளில் கொடுக்கப்பட்டதால் கிடைக்கும் நன்மைகளையும், தீமைகளையும் நோக்கினோமானால்...

No comments:

Post a Comment