Monday, September 14, 2009

இளையோரின் கைகளில் கொடுக்கப்பட்டதால் கிடைக்கும் நன்மைகளையும், தீமைகளையும் நோக்கினோமானால்...

நன்மைகள்
· புலம் பெயர் உறவுகள் ஒவ்வொரு நாட்டிலும் பிறந்தவர்கள்
· அந்நாட்டில் பேசும் மொழிக்கு முதன்மைத்துவம் கொடுத்து அம்மொழியிலேயே கல்வி பயில்பவர்கள்.
· அவர்கள் தோற்றமும், உடை பாவனைகளும் அந்நாட்டிற்குரியவை.
· அவர்களை பொதுவாக போரட்டங்களில் ஈடுபடும் போது அந்நாட்டு மக்களின் கவனத்தை இலகுவாக ஈர்க்கக்கூடியவர்கள்.
· அந்நாட்டு மொழிகளில் புத்தகங்கள், கவிதைகள் எழுதும் திறன் படைத்தவர்கள்.
· அந்நாட்டு சட்டதிட்டங்களை சற்று தெளிவாக தெரிந்தவர்கள்.
· அந்நாட்டு மக்களை எவ்வாறு கவர்ந்து போராட்டத்தை கொண்டு செல்லவேண்டிய வழிமுறைகளை தெரிந்தவர்கள்.
· அவர்கள் படித்தபின் வேலைத்தளங்களிலும் சக தொழிலாளிக்கு இலகுவான முறையில் எமது போராட்டத்தினை எடுத்துப்கூறுபவர்கள்.
· கணனி, புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் அறிந்து அவற்றின் ஊடாக எமது பிரச்சினைகள் பற்றி வேற்றின மக்களிற்கு தெரியப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்கள்.


தீமைகள்
· எளிதில் சில வதந்திதளை நம்பிவிடக்கூடியவர்கள்.
· சிலர் யௌவன பருவத்தின் கோளாறு காரணமாக போராட்டங்களில் கலந்து வேறு சில தீய காரணங்களிற்காகவும், கூடி மகிழ்வதற்காசவும் வருபவர்கள்.

ஆகமொத்தத்தில் இவர்களால் நன்மையே. தீமைகளை திருத்த முயல்வோம்.

ஆகவே இன்று எம்மால் எடுத்துச்செல்லக்கூடியவைகள் சிலவற்றை நோக்குவோம்.

நாம் இருக்கும் நாடுகளிலுள்ள பிரதேசங்களில் பல பத்திரிகைகள் வாரத்திற்கு இருமுறையோ அல்லது மும்முறையோ வெளியிடப்படுவது வழக்கம்.

No comments:

Post a Comment